கோட் படத்தில் சிவகார்த்திகேயன் காட்சி!! பாடம் எடுத்த ப்ளூ சட்டை மாறன்..
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் நாட்டில் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ள கோட் படம் வெளியான ஒரேநாளில் மட்டும் 126.32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
கோட் படத்தில் நடிகை திரிஷா, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் சிறப்பு ரோலில் நடித்துள்ளனர். மேலும் தோனியின் காட்சியும், அஜித்தின் மங்காத்தா படத்தின் BGMயும் இடம் பெற்றது. அதில், கிளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயனிடம் விஜய், வில்லன் மோகனை ஒப்படைத்து, எங்கும் தப்பிக்காதவண்ணம், கவனமாக பார்த்துக் கொள்ளும்படி கூறுவார்.
தொடக்கத்தில் பயத்தை வெளிக்காட்டும் சிவகார்த்திகேயன், அதன் பின்னர் விஜய்யை நோக்கி, " சார் ஒரு நிமிசம், நீங்க இத விட ரொம்ப முக்கியமான வேலையா போறீங்க போல தெரியுது. நீங்க அத பாருங்க. இங்க நான் பாத்துக்குறேன் என்று கூறியிருப்பார். இதனை பலர் விஜய்க்கு அடுத்து அந்த இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்புவார் என்ற தொணியில் இருப்பதை பலரும் விஜய்யை சிலாகித்து பேசி வருகிறார்கள்.
அதிலும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், நான் பார்த்துக்கிறேன் என்றால், விஜய் இடத்திற்கு வரப்போகிறேன் என்கிறாரா? ரஜினி, விஜய் ஆக ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித். இவர்களின் இடங்களை இனி யாரும் பிடிக்க முடியாது.
இவர்களுக்கு உள்ள மாபெரும் ரசிகர் பட்டாளமும் இனி கிடைக்காது. விஜய் அரசியலுக்கு சென்றாலும்.. சினிமாவில் அவரது இடத்தை பிறர் பிடிக்க இயலாது. ஆகவே இருக்கும் இடத்தை தக்க வைத்து முன்னேறுவதே சாமர்த்தியம். குட்டி தல, சின்ன தளபதி எனும் கனவு அர்த்தமற்றது என்று விமர்சித்து பேசியிருக்கிறார்.
நான் பாத்துக்கறேன் என்றால்? விஜய் இடத்திற்கு வரப்போகிறேன் என்கிறாரா?
— Blue Sattai Maran (@tamiltalkies) September 6, 2024
பலருக்கும் ரஜினி, விஜய் ஆக ஆசை. ஆனால் இந்த இடத்தை பிடிக்க ரஜினிக்கு சுமார் 50 ஆண்டுகளும், விஜய்க்கு 30 ஆண்டுகளும் ஆகியுள்ளது.
காதல், குடும்பம், ஆக்சன், காமடி என பல்வேறு ஜானர்களில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை… pic.twitter.com/plamdLWfmD