எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் விலகிய கனிகா!! இனி ஈஸ்வரியாக இவர்தான்..
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல். முதல் சீசன் நிறைவடைந்ததை அடுத்து. தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டிஆர்பியில் நம்பர் 1 படத்தை பெற்றும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி என்ற ரோலில் நடிகை கனிகா நடித்து வந்தார். கடந்த 7 மாதங்களாக படுத்த படுக்கையிலேயே காட்டி வந்தார்கள்.
ஈஸ்வரியாக இவர்தான்
இதனையடுத்து கனிகா தன் மகன் 10ஆம் வகுப்பு படிப்பதால் அவனுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தை கூறி சீரியலில் இருந்து விலகினார். கோமா நிலைக்கு சென்ற ஈஸ்வரி ரோலில் இனி யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வந்தது.

சிலர் நடிகை தேவயானி நடிக்க இருப்பதாக தகவலை கூறி வந்த நிலையில், கனிகாவுக்கு பதிலாக, நடிகை ஸ்ரீஜா நடிக்கவுள்ளாராம். பொம்மலாட்டம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஸ்ரீஜா, ஈஸ்வரி ரோலுக்கு செட்டாகுவா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
