பிறை தேடும் இரவிலே.. ஓரேவொரு பாட்டு தான்!! வேலை செய்த 4 பேருக்கும் விவாகரத்து..
சினிமாத்துறையில் காதலித்து திருமணம் செய்துகொள்வது எப்படி சாதாரண விசயமோ அதேபோல் விவாகரத்து செய்வதும் தற்போது சகஜமாகிவிட்டது. அந்தவகையில் ஒரு படத்தின் பாடலுக்கு பணியாற்றி பிரபலங்கள் விவாகரத்து செய்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011ல் வெளியான படம் மயக்கம் என்ன. இப்படத்தில் பிறை தேடும் இரவிலே என்ற பாடல் இடம்பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்பாடலுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க பாடகி சைந்தவி பாடியிருப்பார். இந்த பாடலில் பணியாற்றி 4 பேரும் விவாகரத்து பெற்றுள்ள செய்திதான் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
இப்படத்தின் இயக்குனர் செல்வராகவன் அப்போது சோனியா அகர்வாலை விவாகரத்து செய்திருந்தார். சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யாவிடம் விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றம் நாடியிருக்கிறார்கள்.
இந்த லிஸ்ட்டில் தற்போது ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவியும் சேர்ந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் இருவரும் பிரிந்து வாழப்போகிறோம் என்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனை நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
You May Like This Video