ஆபிஸ் கார்த்திக்கால் டிஆர்பியில் மண்ணைக் கவ்விய பிரபல சீரியல்! அதிக சம்பளம் பேசும் தொலைக்காட்சி?
தொலைக்காட்சி சேனல்களில் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியால் பெரிய டிஆர்பியை பெற்று பிரபலமான தொலைக்காட்சி ஜீ தொலைக்காட்சி. சொல்வதெல்லாம் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய ஹிட் கொடுத்தது என்றால் அது செம்பருத்தி சீரியல் தான். ஆபிஸ் சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் கார்த்திக்கை கொண்டு ஆரம்பித்த இந்த சீரியல் டிஆர்பியில் 5 இடங்களுக்குள் இடம்பிடித்தது.
ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் ஜோடிகள் நல்ல விமர்சனத்தால் கொடிகட்டி பறந்ததை அடுத்து கார்த்திக் சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகினார். இதற்கு காரணம் அவர் நடித்த வெப்சீரிஸ் படம்தான் என்று கூறப்படுகிறது. அவர் போனால் என்ன நாங்கள் வேறொருவரை கொண்டு நடிக்க வைத்துவிடுகிறோம் என்று சவால் விட்டு தற்போது மண்ணை கவ்விக்கொண்டு இருக்கிறது அந்த தொலைக்காட்சி சேனல். கார்த்திக்கிற்கு பதிலாக அக்னி என்ற தொகுப்பாளர் நடித்து வந்தார்.
கார்த்தியை ஏற்றுக் கொண்ட மக்கள் இவரை சுத்தமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக கொஞ்ச நாட்கள் வண்டியை தட்டுத்தடுமாறி ஓட்டிக்கொண்டிருந்த செம்பருத்தி சீரியல் தற்போது மொத்தமாக டிஆர்பியை இழந்துவிட்டதாம். இதிலிருந்து அந்த சீரியல் வெற்றி பெற்றதற்கு காரணம் கார்த்தி தான் என்பது தெரியவந்துள்ளது.
கார்த்தி ஏற்கனவே விஜய் டிவியில் பல சூப்பர் ஹிட் நாடகங்களில் நடித்துள்ளார். இப்போது கார்த்திக்கு அதிக சம்பளம் கொடுத்தாவது மீண்டும் கூட்டி வந்து விட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு பேச்சு வார்த்தையில் இரங்க இருக்கிறது அந்த தொலைக்காட்சி.