பைத்தியமா..? அந்த நாய் எப்படியோ குரைக்கட்டும்.. பயில்வானை வெச்சு செய்த வெங்கடேஷ் பட்
வெங்கடேஷ் பட்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 4 சீசனில் நடுவராக இருந்து தற்போது சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார் செஃப் வெங்கடேஷ் பட். சமீபத்தில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், விஜய் டிவியிடம் வெங்கடேஷ் அட் எக்கச்சக்கமாக சம்பளம் கேட்டியிருக்கிறார்.
பயில்வானுக்கு பதிலடி
அதற்கு சேனல் நிர்வாகம் மறுத்ததால் தான் அவர் வெளியேறினார் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் வெங்கடேஷ் பட், அனைவருக்கும் வணக்கம், முகநூலில் ஒரு சங்கடமான விஷயம் நடந்திருக்கிறது. பயில்வான் ரங்கநாதன் என்கிற யாரோ ஒருவர் என்னப்பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவுக்கு கீழே அவரை திட்டி பலர் கமெண்ட் போட்டு வருகிறார்கள். என் ரசிகரக்ள் என் மீது மதிப்பு வைத்திருக்கிறீர்கள், அதை செய்ய வேண்டும் . அவருடைய நிலைமை என்னவென்று தெரியவில்லை, பணத்துக்காகவா இல்லை மனநிலை சரியில்லாமல் இதுபோன்று செய்கிறாரா என்று தெரியவில்லை.
ஏதோ பிழைப்பிற்காக சொல்கிறார், அவரது வேலையை செய்யட்டும். அந்த சாணியில் கல் எறிய வேண்டாம், உண்மை இல்லாமல் செய்யக்கூடிய பல விஷயங்கள் இன்று சோஷியல் மீடியாவில் வலம் வருகிறது.
குரைக்கட்டும்
ரஜினிகாந்த் சொன்னதுபோல், யார் என்ன சொன்னாலும் நாம் நமது வழியை பார்த்துக்கொண்டு போக வேண்டும். நாம் நம்முடைய வேலையை செய்வோம். எல்லோரையும் சிரிக்க வைப்போம். எதைப் பற்றியும் நமக்கு கவலையில்லை.
எனவே நீங்கள் தலையிட்டு உங்கள் மன நிம்மதியை கெடுத்துக்கொள்ளாதீர்கள். இதுபோன்று வரும் செய்திகளுக்கு ரியாக்ட் செய்யக்கூடாது. நாம் சூரியனாக இருப்போம் நம்மை பார்த்து எந்த நாய் வேண்டுமென்றாலும் குரைக்கட்டும் என்று வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார்.