அவர்களிடம் மன்னிப்பு கேட்கனும்.. நான் காதலிப்பது அவரைத்தான்!! சென்னை மேயர் பிரியா ராஜன் ஓப்பன்..
தமிழ் நாட்டின் சென்னை மேயராக பணியாற்றி வருபவர் பிரியா ராஜன். சமீபத்தில் நடிகை நயன் தாரா திருமணத்திற்கு முன் சென்னை மேயரை சந்தித்தது பெரியளவில் பேசப்பட்டது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியா ராஜன், தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பகிர்ந்துள்ளார்.
நான் என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர்களுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் தன்னுடைய மகளை மிகவும் காதலிப்பதாகவும் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்ற போது ஆரம்பக்கட்டத்தில் என் மகள் புரிந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
செய்திகளிலும் முதலமைச்சருடன் இருப்பது போன்றவற்றை பார்த்து தான் அம்மா பிஸியாக வேலையில் இருப்பதாக புரிந்து கொள்கிறாள் என்றும் கூறியிருக்கிறார் சென்னை மேயர் பிரியா ராஜன்.
You May Like This Video