மீனாவின் பொய் கர்ப்பம்!! ஏமாற்றி நம்ப வைத்த தந்திரம்!! மிரண்டு போன பிரபலம்..
சினிமா பற்றி பல விஷங்களையும் நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பற்றி யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து பகிர்ந்து வருகிறார் மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு. தெலுங்கில் தேவநாயகா என்ற படத்தில் எண்டிஆர் - ஜெயசுதா நடித்திருந்தனர். படத்தின் கதையில் இருவரும் பிரிந்து விடுவார்கள். அவர்களின் குழந்தை என்.டி.ஆர் தான் தன்னுடைய அப்பா என்று தெரியாமல் பொம்மை விற்றதால் அம்மாவிடம் அடி வாங்குவார் அந்த மகள். அந்த காட்சியை பார்த்து தெலுங்கு ரசிகர்கள் அழுதார்கள்.
மிகப்பெரிய வெற்றிப் படத்தை தமிழில் ரைட்ஸ் வாங்கி, சிவாஜி - சுஜாதா நடித்தார்கள். சுமங்கலி பெயரிடப்பட்ட அப்படத்தில் குழந்தை ரோலில் நடிகை மீனா நடித்திருந்தார். தெலுங்கு படத்தின் எப்படி அந்த காட்சி இருந்ததோ, சுமங்கலி படத்திலும் அந்த காட்சி அமைந்து மீனாவிற்கு மிகப்பெரிய படமாக அமைந்தது. மேலும், அதன்பின் மீனா நல்ல வரவேற்பு கொடுத்து முன்னணி நடிகையாகினார். அதன்பின் ராஜ்கிரண் நடிப்பில் பாசமுள்ள பாண்டியரே படத்தில் மீனா நடித்திருந்தார்.
அப்படம் ஓரளவிற்கு ஓடினாலும் அப்படத்தின் ’கையா இது கையா’ என்ற பாடலை அனுராதா ஸ்ரீராம் குரலில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இந்த பாடலை பாடிய அனுராதா ஸ்ரீராம் தான் என் டி ஆர் நடித்த தேவநாயகா படத்தில் அவருக்கு மகளாக நடித்திருக்கிறார். இப்படி சினிமா எந்தவட்டத்தில் எங்கு யாரை இணைக்கும் என்று தெரியாது.
அதேபோல், ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மீனா குழந்தை ரோலில் நடித்தவரை எஜமான் படத்தில் கதாநாயகியாக நடித்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படம் ரிலீஸ் ஆகி இரு நாட்கள் கூட்டமே இல்லை. ஏவி சரவணன் ஒன்னுமே வராது என்று நினைத்துவிட்டார்.
அப்போது ஏவிஎம் சரவணனுக்கு எஜமான் படத்தை பார்த்த ஒரு ரசிகை, என் வாழ்க்கையில் ரொம்பவும் நொந்து போய்விட்டேன். வானவராயன் போல் எனக்கு ஒரு கணவர் வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்கள். இந்த கடிதத்தை விளம்பரமாக பயன்படுத்தி சூப்பர் ஹிட் படமாக மாற்றினார் ஏவி எம் சரவணன்.
இதுதான் விளம்பர தந்திரம். அப்போது குழந்தை மீனா ரசிகர்களின் கண்ணீல் படவில்லை, தலைக்காணி வைத்து பொய் கர்ப்பமாக நடித்த வைத்தீஸ்வரி ரோலில் நடித்த மீனாவை தான் பார்த்தார்கள் என்று செய்யாறு பாலு, ரசிகர்களை நம்ப வைத்த மீனாவின் தந்திரம் என்று கூறி அந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறார்.