அப்பா சரத்குமாரை பழிவாங்க துடித்து வரலட்சுமி இதை செய்தாரா!! குண்டைத் தூக்கியப்போட்ட பிரபலம்
நடிகர் சரத்குமார்
90ஸ் காலக்கட்டத்தில் மிகப்பெரிய போட்டி நடிகராக திகழ்ந்து டாப் இடத்தில் இருந்தவர் நடிகர் சரத்குமார். தற்போது குணச்சித்திர ரோல்களில் நடித்து வரும் சரத்குமாருக்கும் முன்னாள் மனைவி சாயாவுக்கு பிறந்த மகள் வரலட்சுமியின் திருமணம் கோலாக்கலமான சமீபத்தில் நடந்துள்ளது. இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வரும் செய்திகளில் வரலட்சுமியின் திருமணமும் ஒன்று.
தற்போது சரத்குமார் குடும்ப திருமண பற்றிய சில தகவல்களை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். 90ஸ் சமயத்தில் பீக் இடத்தில் இருந்த சரத்குமார், நடிகை நக்மாவுடன் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் இருவரும் காதலித்து வந்தார்கள் என்றும் ரகசிய திருமணம் செய்து நக்மாவிற்கு ஈசிஆர் பகுதியில் வீடு வாங்கி கொடுத்தார் என்றும் கூறப்பட்டது.
நாட்டாமை நடிகர் என்று அப்போதைய மீடியாக்கள் வெளிப்படையாக பேசப்பட்டது. அது உண்மையா? பொய்யா? என்று தெரிவதற்கு பின் சாயாவுடன் விவாகரத்து பெற்றார். நக்மாவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து பாம்பே பக்கம் செட்டியாகிவிட்டார். அப்போது முதல் மனைவி குடும்பம் இருப்பதே யாருக்கும் தெரியாது. அதன்பின் ராதிகாவை திருமணம் செய்தார்.
பழிவாங்க துடித்து வரலட்சுமி
தன் தாயை தனியாக விட்டுவிட்டார் என்று நினைத்த வரலட்சுமி, அவரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து தான் சினிமாத்துறையை தேர்வு செய்தார். அப்போது ஷங்கரின் பாய்ஸ் படத்தில் சரத்குமார் மகள் வரலட்சுமியை தேர்வு செய்திருந்தார்களாம். இடையில் சரத்குமாருக்கு இந்த விஷயம் தெரிந்து, அதை தடுத்துவிட்டதால் ஜெனிலியா இப்படத்தில் நடித்தார். அந்த கோபமும் வரலட்சுமிக்கு அதிகமாகி, போடா போடி படத்தில் நடிக்க அவரே சென்று வாங்கியிருக்கிறார் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு தனியார் சேனல் வரலட்சுமி நடித்த பாலாவின் தாரை தப்பட்டை படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கியது. அந்த விருது வழங்கும் விழாவில், தனக்கு தன்னுடைய அம்மாதான் விருதை வழங்க வேண்டும் என்று கூறி அழைத்துள்ளார். அப்போது மேடையில் இருந்த பாலாவே, வரலட்சுமி அம்மா சாயா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருப்பார். இதற்கு காரணம் அம்மா போல் நினைத்து தான் காலில் விழுந்தேன் என்று பாலா பேட்டியில் கூட தெரிவித்துள்ளார் என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
பொறுப்பு துறப்பு : செய்திகள் பதிவிட்ட தகவல் அனைத்தும் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் தானே தவிர, இந்த தகவலுக்கு விடுப்பு தளத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.