வரலட்சுமி சரத்குமாரின் கணவர் இத்தனை கோடிக்கு அதிபதியா!! பிரபல கொடுத்த ஷாக்..
கோலிவுட், டோலிவுட்டில் பல படங்களில் கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை வரலட்சுமி. சரத்குமாரின் மகளாக போடா போடி படத்தின் மூலம் அறிமுகமாகிய வரலட்சுமி சமீபத்தில் நிக்கோலாய் என்பவரை காதலித்து வந்துள்ளார். குடும்பத்தினர் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் தற்போது வரலட்சுமி, நிக்கோலாயை திருமணம் செய்து கரம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் வரலட்சுமியின் திருமணம் குறித்து பலர் பலவிதமான விமர்சனங்களை பகிர்ந்து வருபவ்டை போன்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலுவும் ஒரு தகவலை கூறியிருக்கிறார். திருமணம் தாய்லாந்திலும் வரவேற்பு நிகழ்வு சென்னை லீலா பேலஸிலும் நடைபெற்றுள்ளது.
வரலட்சுமி திருமணத்தை பற்றி ஹாட் டாப்பிக்காக பேசினாலும் நிக்கோலாயின் சொத்து மதிப்பு குறித்தும் அவர் எவ்வளவு பெரிய பணக்காரர் என்ற தகவலும் தான் பலவிதமாக பேசி வருகிறார்கள். மும்பையில் ஆர்ட் கேலரி வைத்திருக்கும் நிக்கோலாய் மாதத்துக்கு சில ஓவியங்கள் விற்றாலே போதும் கால் ஆட்டிக்கொண்டு அமரலாம்.
வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் 850 கோடிக்கு ரூபாய் வரை சொத்து மதிப்பு வைத்திருப்பதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். சரத்குமாரின் சொத்தைவிட நிக்கோலாய் தான் பெரிய வசதியுடையவர்.
தாய்லாந்தில் நடைபெறும் அத்தனை விஷயங்களையும் நிக்கோலாய் தான் செலவு செய்திருக்கிறார். ஏற்கனவே நிக்கோலாய், வரலட்சுமிக்கு தங்கத்தில் செருப்பு, விலையுயர்ந்த பங்களா வீடு வாங்கி கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியில் கசிந்துள்ளது.