கூப்பிடாத விஜய், அழுது புலம்பிய நடிகை திரிஷா!! ஹோட்டலில் சந்தித்த அம்மா!! செய்யாறு பாலு ஓபன் டாக்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து டாப் நடிகர்கள் அனைவருடனும் ஜோடிப்போட்டு நடித்த நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. பொன்னியின் செல்வன் படங்களுக்கு பிறகு விடாமுயற்சி, ராம், விஷ்வரம்பரா, ஐடண்டிட்டி, Thug Life உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக திரிஷா பற்றிய செய்திகள் இணையத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது. அதிலும் நடிகர் விஜய்யை தொடர்புப்படுத்தி பேசும் செய்திகள் இணையத்தில் பெரியளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு திரிஷா - விஜய் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். போக்கிரி படத்தில் அசின் ஜோடியாக கமிட்டாகிய போது திரிஷா ரொம்பவும் கோபப்பட்டு இருக்கிறார். போக்கிரி படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி கொண்டாடினார்கள். அந்த நிகழ்ச்சிக்கு 4 நாட்களாக முன்னேற்பாடுகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு தன்னை அழைப்பார்கள் என்று திரிஷா ஆவலுடன் அதற்கு காத்திருக்கிறார்.
ஆனால் கடைசி நாள் வரை அழைப்பிதழ் வரவில்லை. திரிஷாவின் அம்மா, போக்கிரி படத்தின் ப்ரொடக்ஷனுக்கு கால் செய்து ஏன் அழைக்கவில்லை என்று கேட்டிருக்கிறார். லிஸ்ட்டில் திரிஷா பெயர் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.
பின் இயக்குனருக்கு கால் செய்து கேட்ட போது விஜய் சார் கால் பண்ணுவார் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மாலை நிகழ்ச்சி நடக்கும் நிலையில் காலையில் இருந்து திரிஷா லேன்லைன் பக்கத்திலேயே விஜய் கால் செய்வார் என்று காத்திருக்கிறார்.
கடைசி வரை நிகழ்ச்சி முடிந்த போது கூட கால் ஏதும் வரவில்லை என்பதால் திரிஷா அழுது புலம்பி இருக்கிறார். இதன்பின், திரிஷாவின் அம்மா, விஜய்க்கே கால் செய்து, என்ன தம்பி ஒரே படம் தோல்விக்குப்பின் எங்களை ஓரங்கட்டலாமா என்று கேட்டிருக்கிறார். உங்களை நாளைக்கு ஹோட்டலில் சந்தீக்கிறேன் என்று கூறி சந்தித்துள்ளார்.
அந்த சமயத்தில் திரிஷா விஷயம் சம்பந்தமாக வீடியோ வைரலானதால், அங்கு நீங்கள் வந்திருந்தால் ஒட்டுமொத்த மீடியாவும் உங்கள் மீது கவனம் செலுத்தி இருப்பார்கள். அந்த வீடியோ பற்றிய கேள்விகளும் எழுந்திருக்கும், அந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல முடிந்திருக்குமா என்று விஜய், திரிஷா அம்மாவிடம் கூறியிருக்கிறார் என்று போக்கிரி படக்குழுவினர் சார்ப்பில் என்னிடம் கூறியதாக செய்யாறு பாலு பேட்டியில் தெரிவித்துள்ளார்.