சிவகார்த்திகேயனை சினிமாவில் வளர விடாமல் தடுத்த பிரபல சினிமா குடும்பம்.. வெளிவந்த பல வருட ரகசியம்!
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சிவகார்த்திகேயன். இவர் 2012 -ம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் பல ஹிட் படங்கள் கொடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக மாறினார். இதனால் சில சினிமா பிரபலங்கள் இவரின் வளர்ச்சி பார்த்து பொறாமை படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியானது.

சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நான்கு படம் நடிப்பதாக இருந்துள்ளது. அந்த நிறுவனம் சிவகார்த்திகேயன் இடம் நான்கு படத்திற்கான அட்வான்ஸ் பணம் கொடுத்து சில ஒப்பந்தம் போட்டுள்ளது அதில் நான்கு படத்தை முடிக்கும் வரை எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று இருந்துள்ளது.
இதனால் சிவகார்த்திகேயனுக்கு எந்த படத்திலும் நடிக்க முடியாமல் போனது. அப்போது இவர் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுக்க முயன்றுள்ளார். இருப்பினும் பணத்தை அந்த நிறுவனம் வாங்க மறுத்துள்ளது. இதனால் இருவருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது
கடைசியில் சிவகார்த்திகேயன் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர சில பிரபலங்கள் உதவி செய்தார்களாம். இவ்வாறு பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
