அப்பாவால் பட்ட அவமானம், அசிங்கம்!! குக்வித் கோமாளி 6-ஐ கண்கலங்க வைத்த மதுமிதாவின் பேச்சு...
குக்வித் கோமாளி 6
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் சீசன் 6 தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது.
போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தி வரும் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான மதுமிதா குறித்த ஒரு பிரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டு வைரலாக்கியுள்ளது.
அந்த பிரமோ வீடியோவில், தன் வாழ்க்கையில் நடந்த மறக்கமுடியாத சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார் மதுமிதா. அதில், என்னுடைய தந்தை நான் 1 வயசாக இருக்கும்போதே இறந்துவிட்டார்.
மதுமிதா
அவர் இறந்ததும் என் குடும்பத்தினர் எல்லோரும் என்னை அப்பாவை முழுங்கிட்டு வந்தவ என்று என்னை திட்டித்தீர்த்து வந்தனர். இப்போ வரைக்கும் அந்த பழி வார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 5வது பெண் குழந்தையாக நான் பிறந்தேன் என்று என் அப்பா என்னை அடித்தாராம்.
ஆனால் இந்த குடும்பத்தில் நான் தான் ஆண் பிள்ளையாக இருக்கிறேன் என்று என் அம்மா சொல்லுவாங்க.அது எனக்கு சந்தோதம் தான் என்று மதுமிதா சிரிப்பு கலந்த கண்ணீருடம் பேசியுள்ளார்.
அங்கிருந்த கோமாளிகள், போட்டியாளர்கள், நடுவர்கள் அனைவரும் மதுமிதாவால் கண்ணீருடம் உருகி நின்றனர். மேலும் செஃப் தாமு, அப்பாவாக நான் இருக்கிறேன் உனக்கு நீ எந்த இடத்திலும் கவலைப்படக்கூடாது என்று ஆறுதல் கூறியிருக்கிறார். குறித்த பிரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.