ரன்வீரை திருமணம் செய்ய விருப்பமே இல்லை.. சர்ச்சையை கிளப்பிய நாயகி தீபிகா படுகோண்
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலம நட்சத்திர நாயகி தீபிகா படுகோண். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகும் நிலையில், தனது கணவர் குறித்தும் திருமணம் குறித்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை எங்களுடைய காதல் எப்படி ஆரம்பித்தது என்று கூட தெரியவில்லை. ரன்விரை சந்திப்பதற்கு முன்பே கடந்த கால அனுபவங்களை வைத்து திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என முடிவில் இருந்தேன்.
முக்கியமாக ஹீரோக்களை கட்டாயம் கல்யாணம் பண்ணிக்க கூடாது என உறுதியாக இருந்தேன். ஆனால் என்னுடன் ரன்வீர் அறிமுகமானவுடன் அதை எல்லாம் மாற்றி விட்டார். திருமணம் மரியாதையை அதிகரித்துள்ளது. இது எல்லாம் மேஜிக் போல் உணர்கிறேன் என்று கூறியுள்ளார் தீபிகா.