தீபிகா படுகோனுக்கு என்ன ஆச்சி? மருத்துவமனைவில் அனுமதித்தது இதற்கு தானா!!
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்நடிகை தீபிகா படுகோன். அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இந்தியாவில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட தீபிகா குழந்தை பெற்றுக்கொள்ளாமல் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரன்வீர் சிங்கும் படங்களில் ஈடுபாடு கொடுத்து பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் பல விழாக்களில் கலந்து கொண்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வந்த தீபிகா நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன் நடிக்கும் பிரஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கான படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கும் நிலையில் தீபிகா படுகோனேவின் இதயத்துடிப்பு அதிகரித்ததால் வலி ஏற்பட்டு சிரமப்பட்டுள்ளார். உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது தீபிகா படுகோனே நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள் என்று படத்தில் பணியாற்றும் மனோபாலா விஜயபாலன் தெரிவித்துள்ளார்.