அட்ஜெஸ்ட்மெண்ட் பண்னலனா ஹீரோயின் ஆகமுடியாது!! அதிர்ச்சி கொடுத்த நடிகை தேவி பிரியா..
சின்னத்திரையில் வில்லி ரோல்களில் நடித்து மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் தான் நடிகை தேவி பிரியா. இவர் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தேவி பிரியா தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தையும் அட்ஜெஸ்மெண்ட் பற்றியும் பகிர்ந்துள்ளார்.
அதில், ’பெங்களூரிலிருந்து ஒரு போன் கால் வந்தது. அதில் ஒருவர் என்னிடம் ஆங்கிலத்தில் டீசண்டாக பேசினார். அப்போது அந்த நபர், பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது உங்களால் இங்கு வர முடியுமா? என்று கேட்டார். நான் அதற்கு நிகழ்ச்சி நடக்கும் நாள் அன்று வருகிறேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் சென்று விடுவேன் என்று கூறினேன்.
அந்த நபர் மீண்டும் என்னிடம், நீங்கள் இரவு விருந்தில் பங்கேற்க வேண்டும் என கூறினார். நான் அதெல்லாம் என்னால் முடியாது என்று மறுத்தேன்’. கடைசியில் அவர்கள் எந்த நோக்கத்தின் அடிப்படையில் என்னை அழைத்தார்கள் என்று புரிந்து கொண்டேன்.
மேலும் பேசிய தேவி பிரியா, சிறுசிறு ரோலில் நடிப்பதற்கு கூட பலருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. எல்லா ஆடிஷனும் முடிந்த பின் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது தான் கடைசி ஆப்ஷனை கிளிக் செய்தால் தான் சினிமாவில் ஹீரோயினாக முடியும்.
ஒரு படத்தில் அறிமுகமாகிவிட்டு அடுத்த வாய்ப்புக்காக தேடும் நடிகைகளுக்கு இது பரவலாக ஏற்பட்டு வருகிறது என்றும் இந்த தொல்லையால் தான் பல நடிகைகள் திருமணம் செய்து செட்டிலாகி விடுகிறார்கள். எனக்கு இதுபோன்ற பிரச்சனை வந்தது கிடையாது அப்படி யாராவது அனுகினால் அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் நடிகை தேவி பிரியா.