சூப்பர் ஸ்டார் வீட்டில் தீபாவளி மீட்டிங்!! மீண்டும் சேரும் தனுஷ் - ஐஸ்வர்யா..
தனுஷ் - ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவாழப்போவதாக அறிக்கை வெளியிட்டு விவாகரத்து தகவலை வெளியிட்டனர்.
18 வருட திருமண வாழ்க்கையில் யாத்ரா,லிங்கா என்ற மகன்கள் இருக்கையில் தங்கள் விவாகரத்தை அறிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தனர். இருவரின் வீட்டாரும் சமாதானம் செய்தும் இருவரும் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். ஏப்ரல் மாதம் மனுத்தாக்கல் செய்தநிலையில், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகவில்லை.
இதன்பின் 19 ஆம் தேதியும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகவில்லை. நவம்பர் 2 ஆம் தேதி விசாரணைக்கு வழக்கு வந்தபோதும் மூன்றாவது முறையாக தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
மொத்தம் 3முறை விவாகரத்து வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை என்பதால் நிச்சயம் இருவரும் இணைவது உறுதிதான் என்று கூறப்பட்டது.
மீட்டிங்
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ரஜினிகாந்தின் வீட்டில் தனுஷும் ஐஸ்வர்யாவும் சந்தித்துக்கொண்டதாகவும், தனுஷிடம் ரஜினிகாந்த் மனம்விட்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யாமல் இணைகிறோம் என்று தனுஷும் வாக்கு கொடுத்திருப்பதாகவும் அதன்பின் இருவரும் மகிழ்ச்சியோடு தீபாவளி கொண்டாடியதாகவும் போயஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.