18 வருட திருமண வாழ்க்கை!! திட்டமிட்டு விவாகரத்து செய்யப்போகும் தனுஷ் - ஐஸ்வர்யா.. வெளியான ரகசியம்..
தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்தார். அதற்காக கடந்த 2022 ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் அறிக்கை மூலம் தனித்து வாழ்வதாக தெரிவித்தனர்.
அதை அறிவித்த 2 ஆண்டுகளுக்கு பின் தனுஷ் - ஐஸ்வர்யா சட்டப்படி விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த மனுவை ஏற்ற குடும்ப நல நீதிமன்ற அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தனுஷ் - ஐஸ்வர்யா இருவரையும் விவாகரத்து கோரிய வழக்கில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து விசயம் பேசுபொருளாக மாற, பல பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி விவாதம் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே பிரிந்து 2 ஆண்டுகளுக்கு பின் சட்டப்படி விவாகரத்து கோரி மனு கொடுத்திருக்கிறார்கள். அந்தவகையில், விவாகரத்து கோரும் தம்பதியர்கள், விசாரணைக்கு பின் சட்டப்படி 2 ஆண்டுகள் அல்லது 6 மாதங்கள் இருவரும் பிரிந்திருக்க வேண்டும். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜராஜ நீதிபதியிடன் விசாரணையின் படி இருவரின் கருத்துக்களை கேட்டப்பின் தான் விவாகரத்து முடிவு வரும்.
இதனை தெரிந்து தான் கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரியப்போவதாக அறிவித்தனர். அந்த அறிக்கை வெளியிட்டு 2 ஆண்டுகள் கழித்து தனுஷ் - ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் சட்டபடி பிரிய முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இருவரும் இதற்கு முன்பே திட்டமிட்டு தான், விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்திருக்கிறார்களா? என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.