மீண்டும் மீண்டுமா!! கோர்ட்டுக்கே இரண்டாம் முறை டிமிக்கி கொடுக்கும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..
தனுஷ் - ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் மற்றும் அவர் மனைவியும் ரஜினிகாந்தின் செல்ல மகளுமான ஐஸ்வர்யாவும் அவர்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து வாழ்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஆனால் இவர்கள் இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை, விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவருமே ஆஜராகவில்லை. இதனால், இவர்கள் இருவருமே மீண்டும் இணைய உள்ளார்கள் என்று பேசப்பட்டது.
இந்நிலையில், அக்டோபர் 7 ஆம் தேதி விசாரணைக்கு தனுஷ் - ஐஸ்வர்யா வராத அக்டோபர் 19 ஆம் ஹேதி வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. நேற்று 19 ஆம் தேதி விசாரணைக்கு இருவரின் விவாகரத்து வழக்கு வந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் மறுபடியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையாம்.
எனவே, இருவரும் ஆஜராகாததால், நீதிபதி நவம்பர் 2 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார். இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்வது உறுதியாகிவிட்டதா என்ற கேள்வி எழுந்து வருகிறது.