தனுஷை பிரிந்து ஒரு வருஷம் கழித்து ஒரே தியேட்டரில் ரஜினி மகள் ஐஸ்வர்யா!! வைரலாகும் வீடியோ..
சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் மகளாக ஐஸ்வர்யா நடிகர் தனுஷை 2004ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி யாத்ரா, லிங்கா என்ற இரு மகன் இருக்கும் நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிக்கையை வெளியிட்டனர்.
தனுஷும் தன் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். ஐஸ்வர்யா இயக்கத்தில் ஈடுபட்டு லால் சலாம் படத்தினையும் முடித்துவிட்டார். தனுஷுடன் ஐஸ்வர்யா சேருவார் என்று பலர் எதிர்பார்த்த நிலையில், உதவி இயக்குனருடன் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ளது. பல நட்சத்திரங்கள் படத்தை பார்த்த நிலையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா, ரோஹினி திரையரங்கிற்கு ஜெயிலர் படத்தை பார்க்க முதல் காட்சிக்கு வந்திருக்கிறார்.
அவரை தொடர்ந்து நடிகர் தனுஷுன் ரோஹினி தியேட்டருக்கு ஜெயிலர் படம் பார்க்க சென்றுள்ளார். இருவரும் தியேட்டரில் சந்தித்தார்கள் என்றும் இருவரும் இணைந்து படத்தை பார்த்தார்களா என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.