நஷ்டத்தையே சந்தித்த இயக்குனர்? இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்புக்கு இறங்கிய அமீர்!
தமிழ் சினிமாவில் சேது படத்தின் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியவர் இயக்குனர் அமீர். இதன்பின் மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவை நடிக்க வைத்து நல்ல வரவேற்பு பெற்றார். ராம், பருத்தி வீரன், போன்ற ஹிட் மூன்று படங்களை கொடுத்த அமீர் அதன் பின் பல காலம் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்தார்.
அதற்கு காரனம் மெளனம் பேசியதே, பருத்திவீரன், ராம் படங்கள் நல்ல படமாக மக்கள் ஏற்றுக்கொண்டாலும் அதன் வசூல் மிகப்பெரியளவில் நஷ்டத்தை தான் கொடுத்தது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
இதையடுத்து வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அமீர், காமெடி நடிகர் சூரியை வைத்து ஒரு படம் உள்ளிட்ட சில படங்கலை இயக்கவுள்ளார். மேலும் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யாவின் வாடிவாசல் படத்தினை தயாரித்தும் வசனம் எழுதியும் வருகிறார்.
அவரின் வாழ்க்கை வரலாற்று சம்பந்தமான காணொளியை பார்ப்போம்.