குடிக்கு அடிமை.. கதறி அழுத இரு மகன்களால் டிஸ்கோ சாந்தி எடுத்த முடிவு..
டிஸ்கோ சாந்தி
பிரபல பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மகளான நடிகை சாந்தி, தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஒரியா உள்ளிட்ட மொழிகளில் கவர்ச்சி நடனம் ஆடி அதன் மூலம் டிஸ்கோ சாந்தி என்று அழைக்கப்பட்டார்.
வறுமையின் காரணமாக 7 வயதில் சினிமாவிற்கு வந்த இவர் முதலில் நடிகையாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், தொடர்ந்து நடிப்பு கைகுடுக்காததால் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடுவதை கேரியராக மாற்றிக்கொண்டார்.
அதிர்ச்சி ரகசியம்
தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது, பேட்டி ஒன்றில் குடிக்கு அடிமையானதை குறித்து பேசியுள்ளார்.
அதில், "என் கணவர் இறந்த பிறகு, எனக்கு வாழ பிடிக்கவில்லை, தினமும் அவரை நினைத்து தூக்கம் வராத காரணத்தால் நான் குடிக்க தொடங்கினேன்.
பின்பு, அது எனக்கு பழகி விட்டது அப்படியே குடித்து குடித்து என் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது.
அந்த நிலையில், என் இரு மகன்கள் என்னிடம் வந்து இந்த குடியை நிறுத்துமாறு கண்ணீர் விட்டு அழுதார்கள். மனம் தாங்க முடியாமல் குடிப்பதை நிறுத்திவிட்டேன்" என்று கூறியுள்ளார்.