ஆளுநரின் செயலால் விஜய்க்கு ஆதரவாக கொந்தளித்த நடிகை ஸ்ரேயா சரண்..
தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததா தற்போது கடும் இழுப்பறி நீடித்து வருகிறது. 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாகவுள்ள தவெகவை ஆட்சி அமைக்க கவர்னர் இன்னும் அழைக்கவில்லை.

பெரும்பான்மையை காட்டுங்கள் என்று கூறி விஜய்யின் அழைப்பை ஆளுநர் நிராகரித்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இந்த செயல் குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக பேசி தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
ஸ்ரேயா சரண்
அதில் நடிகை ஸ்ரேயா சரண், தவெக கட்சி 108 இடங்களை வென்றுள்ளது. அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை மறுப்பது, தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பிற்கு இழைக்கப்படும் அவமதிப்பு.

தேர்ந்தெடுக்கப்பட்ட 233 உறுப்பினர்களால் இன்னும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள இயலாத நிலையில், இது மாநிலத்திற்கு இழக்கப்படும் அவமானம் மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கே விழுந்த ஒரு பேரிடி என்று குறிப்பிட்டுள்ளார்.