விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போ..ரசிகையின் பேச்சால் அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..
நடிகர் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி விவாகரத்து மனுவை செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தற்போது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
27 ஆண்டு மண வாழ்க்கை முடிவுக்கு வரப்போகும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சங்கீதாவை கொந்தளித்தபடி திட்டி வருகிறார்கள்.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விமர்சிப்பது தவறு என்று கூறி வரும் ரசிகர்களின் ஒரு ரசிகை அளித்த பேட்டி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அதில் அப்பெண், விஜய்யை விட்டு யார் வேண்டுமானாலும் செல்லட்டும், நாங்க இருக்கிறோம், அக்காவா, தங்கையாகா ஏன் பொண்டாட்டியா கூட இருப்போம், தளபதி கூட நாங்க நிற்போம் என்று பேசியிருக்கிறார். அந்த ரசிகை பேசிய பேச்சை பார்த்த நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் சினிமா விமர்சகர், ப்ளூ சட்டை மாறன் அவரது எக்ஸ் தள பக்கத்தில், அப்பெண்ணின் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், தளபதிக்கு பொண்டாட்டியா நாங்க நிப்போம் - புரட்சி மங்கை அதிரடி. 'தவெக கூட்டத்தில்..பெத்த புள்ளை செத்தாலும் பரவாயில்லை' எனக்கூறிய தவெக தாரகைகளின் அடுத்த கட்ட முரட்டு வளர்ச்சி இது. இன்னும் பல கேவலங்களை நாம் கேட்கப்போவது உறுதி என்று கூறி விமர்சித்துள்ளார்.
தளபதிக்கு பொண்டாட்டியா நாங்க நிப்போம் - புரட்சி மங்கை அதிரடி.
— Blue Sattai Maran (@tamiltalkies) February 28, 2026
'தவெக கூட்டத்தில்..பெத்த புள்ளை செத்தாலும் பரவாயில்லை' எனக்கூறிய தவெக தாரகைகளின் அடுத்த கட்ட முரட்டு வளர்ச்சி இது.
இன்னும் பல கேவலங்களை நாம் கேட்கப்போவது உறுதி.pic.twitter.com/x5JtErbSXs