பார்ட்டியில் ஃபுல் போதை? ஷூட்டிங்கில் கண்டபடி உளறி மாட்டிக்கொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா..

Vijay Deverakonda
By Edward Aug 04, 2022 09:05 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் மிகப்பெரியளவில் வெற்றிபெற்று பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்திற்கு பின் அவரது மார்க்கெட் அதிகரிக்க அடுத்தடுத்த பெரிய படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

தற்போது பான் இந்தியன் படமாக வெளியாகவுள்ள லைகர் என்ற படத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா பிரமோஷன் விசயங்களுக்காக பேட்டிக்கொடுத்தும் வருகிறார். அப்படி சமீபத்தில் கரண் ஜோகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓப்பனாக பல விசயங்களை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு குடிப்பழக்கம் உள்ளது என்றும் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு சென்று நன்றாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். காலையில் போதை இறங்காமல் எழுந்து அப்படியே படப்பிடிப்புக்கு சென்றுவிட்டதாகவும் படத்தின் காட்சிக்காக குடிக்க வேண்டியதாகவும் இருந்துள்ளது.

அதனால் போதை அதிகமாகி வசனம் சொல்ல வேண்டும் என்பதை மறந்து உளற ஆரம்பித்துவிட்டேன். இதனால் சிரிக்கவும் செய்ததால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.