விக்ரமுக்கு தீட்டிய சதித்திட்டம்.. அந்த ஒரு விஷயத்தால் மருமகனை ஒதுக்கிய டாப் ஸ்டாரின் தந்தை..
இந்திய சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக தான் சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.
இதன் பின்னர் விக்ரம் பல படங்களில் நடித்திருந்தாலும் 1999 -ம் ஆண்டு வெளியான சேது படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகர் என்று மக்கள் முன் நிரூபித்தார்.
விக்ரம் சினிமாவில் அறிமுகமாகும் போது பலரும் சதித்திட்டம் தீட்டினார்களாம். அதில் ஒருவர் தான் நடிகர் தியாகராஜன் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.
நடிகர் விக்ரமின் சொந்த தாய்மாமன் தான் நடிகர் தியாகராஜன். ஆனால் சில காரணங்களால் இரு குடும்பமும் பேசிக் கொள்வதில்லை. மேலும் விக்ரமால் தான் பிரசாந்த்தின் சினிமா வாழ்க்கை சரிந்தது என்று தியாகராஜன் நினைப்பதாக பல செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் ராசி அழகப்பன், விக்ரம் மற்றும் தியாகராஜன் இருவருக்கும் இடையே உள்ள சண்டை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், விக்ரம் குடும்பத்தினர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இது தியாகராஜனுக்கு பிடிக்கவில்லை. இதனால் பெரிய சண்டை ஏற்பட்டு தற்போது இரு குடும்பமும் பேசாமல் இருந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.