கலைமாமணி விருது!! கொல்லங்குடி கருப்பாயி (99) வயது மூப்பு காரணமாக காலமானார்..
கொல்லங்குடி கருப்பாயி
1995ல் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ஆண்பாவம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் கொல்லங்குடி கருப்பாயி. இப்படத்திற்கு முன் மண்வளம் கமழும் நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரபலமான கருப்பாயி, சினிமாவிலும் பல நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்தியவர்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட மண் இசை பாடல்களை பாடிய கொல்லங்குடி கருப்பாயி பாடியிருக்கிறார். சிவகங்கை மாவட்டன் கொல்லங்குடி கிராமத்தில் வசித்து வந்த பாடகி கருப்பாயி, நளித்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் மாதாந்திர தொகையை வைத்தே குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு குறைந்தாலும் திருவிழாக்களில் நாட்டுப்புற பாடல்களை பாடி வந்துள்ளார். வயதானதால் அதிலும் பாடமுடியாமல் போக தினமும் வாழ்க்கையை கஷ்டத்துடனும், வறுமையின் பிடியில் தவித்தும் இருந்திருக்கிறார் கருப்பாயி.
கலைமாமணி விருது
1993ல் மறைந்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் கரங்களால் கலைமாமணி விருது பெற்றார் கருப்பாயி. உறவினர் ஒருவரை திருமணம் செய்த கருப்பாயி, கணவர் விபத்தில் ஒன்றில் இறந்துவிட, குழந்தையை வளர்ந்து வரும் போது குழந்தையும் இறந்துவிட, தனிமையில் வாடி வந்திருக்கிறார்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கொல்லங்குடி கருப்பாயி தன்னுடைய 99வது வயதில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் கலைத்துறையினருக்கு மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்திருக்கிறது.