ஜோதிகாவை திருமணத்திற்கு முன் தெரியாமல் காதலித்த இயக்குனர்.. இடையில் புகுந்த நடிகர் சூர்யா
சினிமாத்துறையில் ஒரு படத்தில் பணியாற்றும் நடிகர்களோ அல்லது இயக்குனர்களோ சக நடிகைகளை காதலித்து ரியல் ஜோடிகளாக மாறுவது வழக்கம்.

ஜோதிகாவை இயக்கிய கெளதம்
அப்படி காதல் ஜோடிகளாக மாறியவர்களில் முக்கியமானவர்கள் அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, பிரசன்னா - சினேகா உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.
அப்படி சூர்யா - ஜோதிகா காக்க காக்க படத்தில் நடித்திருந்த போது அப்படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகை ஜோதிகாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

ஒரு தலை காதல்
இப்படத்திற்கு முன்பே சூர்யாவும் ஜோதிகாவும் ரகசியமாக காதலிப்பது தெரியாமல் இயக்குனர் ஜோதிகாவை காதலித்துள்ளார். அதன்பின் ஒரு கட்டத்தில் இருவரும் காதலிப்பது கெளதம் மேனனுக்கு தெரிந்ததும் அந்த காதலை பூட்டி மறைத்துள்ளார்.
இதன்பின் வேட்டையாடு விளையாடு மற்றும் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தினை ஜோதிகாவை வைத்து இயக்கியும் இருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். இந்த விசயம் பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வைரலாகி வருகிறது.
