தொடர்பில் இருந்த நடிகையை தூக்கிசுற்றிய நடிகர்! கோபத்தில் திட்டிய கவுண்டமணி..
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவனாக இருந்து வந்தவர் நடிகர் கவுண்டமணி. இவர் படத்தில் நடித்திருந்தால் போது சிறிய நடிகர்கள் படமும் மிகபெரிய மார்க்கெட்டை பெருமாம். அப்படியான காமெடி சென்ஸ் கொண்ட கவுண்டமணி சில சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார்.
அவர் பற்றிய சில உண்மை செய்திகளை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் உடைத்துள்ளார். சாதாரண நடிகர்களே பல நடிகைகளுடன் தொடர்பில் இருப்பது அனைவருக்கும் தெரியும். அந்தவரிசையில் கவுண்டமணியும் இருக்கிறாராம்.
நடிகை சர்மிளி மீது கவுண்டமணிக்கு ஒரு கண் இருந்ததாகவும் ரகசிய தொடர்பில் இருந்து தனி ஒரு வீட்டினையும் வாங்கி கொடுத்திருக்கிறாராம். அப்படியாக ஆவாரம் பூ படத்தின் போது எனக்கு ஜோடியாக நடிகை சர்மிளி நடித்திருப்பார்.
அப்படத்தில் சர்மிளியை நான் தூக்கி சுற்றுவது போன்ற காட்சியை படத்தின் டப்பிங்கில் கவுண்டமணி பார்த்துள்ளார். இதை பார்த்ததும் என்னை எப்படி இதை செய்யலாம் என்று நடிகை சர்மிளி இருக்கும் போதே திட்டிவிட்டாராம்.
அதன்பின் இனிமேல் சர்மிளிக்கு ஜோடியாக நடிக்க விடவில்லை. இதனாலே என்னுடைய மார்க்கெட் போனது என்று பயில்வான் கூறியுள்ளார். பல முறை என்னால் தான் உனக்கு மார்க்கெட் போனது என்று சர்மிளி வெறுப்பேற்றி வந்தார்.