அத்துமீறி நுழைந்து அப்படி செய்வது நியாயமா!! கடும் கோபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்..
பள்ளிப் பருவத்தில் இருந்தே ஜி.வி. பிரகாஷை காதலித்து வந்த சைந்தவி, கடந்த 2013ம் ஆண்டு அவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறது. சமீபத்தில் இவர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிக்கை மூலம் செய்தியை பகிர்ந்திருந்தனர்.
இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியது. இதுகுறித்தி பலர் பிரிவுக்கு என்ன காரணம் என்றும் பலவிதமான கருத்துக்களை கூறியும் இணையத்தில் செய்திகள் பரவி வந்தது.
இதையறிந்த ஜிவி பிரகாஷ், போலியான தகவல்களை பகிர்ந்து வருபவர்களை கண்டித்து ஒரு அறிக்கை பதிவினை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இருவரும் பரஸ்பரமாக ஒப்புக்கொண்டு நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களிடம் கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். சில விமர்சனங்கள் காயப்படுத்துகிறது என்று கூறவே இந்த பதிவு என்று கூறி ஜிவி பிரகாஷ் குமார் அந்த பதிவினை பகிர்ந்திருக்கிறார்.
