சைந்தவி - ஜி வி பிரகாஷ் விஷயத்தில் விஜய், ஏ ஆர் ரகுமான் தலையிட்டார்களா!! உண்மையை கூறிய பிரபலம்..

Vijay A R Rahman G V Prakash Kumar Gossip Today Saindhavi
By Edward May 19, 2024 07:30 AM GMT
Report

ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை என்றும் தங்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தனர். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயம் குறித்து பலர் பலவிதமாக பேசியதை கண்டித்த ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

சைந்தவி - ஜி வி பிரகாஷ் விஷயத்தில் விஜய், ஏ ஆர் ரகுமான் தலையிட்டார்களா!! உண்மையை கூறிய பிரபலம்.. | Gv Prakash Saindhavi Issue Was Compromise Vijay

இந்நிலையில் இவர்களின் விவாகரத்து விவகாரத்தில் ஏ ஆர் ரகுமான் மற்றும் விஜய் தலையிட்டுள்ளார்கள் என்ற செய்தி இணையத்தில் பேசப்பட்டு வருவதை குறித்து சினிமா விமர்சகர் அந்தணன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்தணன் அளித்த பேட்டியொன்றில், தாய்மாமன் - மருமகன் என்ற உறவு இருவருக்கும் பலமாக இருந்தது இல்லை என்றும் அவ்வலவு ஏன் இருவருக்கும் பெரியளவில் உறவும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் சிபாரிசு இல்லாமல் தான் ஜிவி பிரகாஷ் தன் கேரியரை தனியாக தொடங்கினார். அதன்பின் தான் ரகுமானிடம் அவருக்கு வாய்ப்பே கிடைத்திருக்கிறது.

சைந்தவி - ஜி வி பிரகாஷ் விஷயத்தில் விஜய், ஏ ஆர் ரகுமான் தலையிட்டார்களா!! உண்மையை கூறிய பிரபலம்.. | Gv Prakash Saindhavi Issue Was Compromise Vijay

ஏன் அவர் அம்மா கூட இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்பது தான் உண்மை. இதுமட்டும் இல்லாமல் விஜய் இந்த பிரச்சனையில் தலையிட்டார் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், என்ன தான் நட்பாக நெருங்கி பழகி இருந்தாலும் குடும்ப விஷயத்தில் தலையிடமாட்டார்கள், அது தான் உண்மை என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார் அந்தணன்.