நயன்தாராவா இல்லை த்ரிஷாவா.. யாருக்கு அதிக சம்பளம்? டாப் 5 ஹீரோயின் லிஸ்ட்
தென்னிந்திய சினிமாவில் டாப் 5ல் கதாநாயகிகளாக அதிகம் சம்பளம் வாங்கி வருவது யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இதில் கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் த்ரிஷா, நயன்தாராவில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார் என்றும் பார்க்கலாம் வாங்க.
டாப் 5 நடிகைகள்
நயன்தாரா - மெகாஸ்டார் 157, டாக்சிக், மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
ராஷ்மிகா - புஷ்பா 2, சாவா, அனிமல் என மிகப்பெரிய பான் இந்தியன் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த ராஷ்மிகா ரூ. 13 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
சாய் பல்லவி - தென்னிந்திய சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ள சாய் பல்லவி, தற்போது ராமாயணா படத்தின் மூலம் பாலிவுட் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 12 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
த்ரிஷா - தென்னிந்திய சினிமாவில் பிசியாக நடித்து வரும் த்ரிஷா, ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம்.
சமந்தா - வெப் தொடரில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் . மேலும் படங்களில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.