நாக சைதன்யாவை நான் வளர்க்கவில்லை!! உண்மையை உடைத்த வளர்ப்பு தாய் அமலா..
தெலுங்கு, தமிழ் சினிமா வட்டாராத்தில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நாகர்ஜுனா. ராம்நாயுடுவின் மகள் லட்சுமி என்பவரை முதலில் திருமணம் செய்த நாகர்ஜுனா கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிர்ந்தார். அதன்பின் 1992ல் நடிகை அமலாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். லட்சுமியும் இரண்டாம் திருமணம் செய்து சென்னையில் செட்டிலாகினார்.
இந்நிலையில் அனைவரும் நாகர்ஜுனாவிற்கு பிறந்த மகன் நடிகர் நாக சைதன்யா அமலாவின் மகன் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் நாகர்ஜுனா - லட்சுமிக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா. முதல் மனைவியை பிரிந்த நிலையில், நாகர்ஜுனாவின் இரண்டாம் மனைவி அமலா தான் வளர்த்து வந்துள்ளார் என்று கூறப்பட்டது.
நாகர்ஜுனா அமலாவுக்கு பிறந்தவர் தான் நடிகர் அகில். இந்நிலையில் நடிகை அமலா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நாக சைதன்யா என்னுடன் வளரவில்லை. சென்னையில் அவர்களது தாயுடன் தங்கியிருந்தார். அவ்வப்போது ஹைதராபாத் வந்து செல்வார்.
தந்தையுடன் நேரத்தை செலவிடுவார். மேலும் அகில் மற்றும் நாக சைதன்யா இடையே நல்ல பிணைப்பு இருக்கிறது. அகில் இங்கு வரும் போது சைதுவுடனே இருப்பது வழக்கம், சைது எப்போது வருவான் என்று காத்திருப்பான் என்று தெரிவித்துள்ளார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/4f6695b6-4f38-414d-b8ed-934d8c51f8a8/24-6686814b43e7e.webp)