நீ யாருன்னே தெரியாது!! உனக்கெல்லாம் மியூசிக் பண்ண முடியாது!! ஆணவத்தில் ராஜ் கிரணை ஒதுக்கிய இளையராஜா..
தமிழ் சினிமா கம்பெனியில் ஆபிஸ் பாயாக இருந்து கலெக்ஷன் பாயாக பிரமோஷன் ஆனப்பின் சம்பாதித்த காசை சேர்த்து ஆங்கில படங்களை ரிலிஸ் செய்து வந்தவர் நடிகர் ராஜ் கிரண். பின் தனக்கான ஒரு ஆபிஸ் ஆரம்பிக்க அதற்கு ஆபிஸ் பாயாக வடிவேலுவை நியமித்தார். சென்னைக்கு தயாரிப்பாளராக சென்று படங்களை அதே விலைக்கு வாங்கி விற்றார். போக போக தயாரிப்பாளரான ராஜ் கிரண், கஸ்தூரி ராஜாவை அறிமுகப்படுத்தினார்.
அப்போது அப்படத்தில் இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் வீட்டு வாசலில் நின்றிருக்கிறார். அபோது இளையராஜா நீ யாருன்னே தெரியாது, உன் படத்துக்கு எல்லாம் மியூசிக் போட முடியாது என்று கூறியிருக்கிறாராம்.
அதன்பின் கவிஞர் வாலி இளையராஜாவிடம், ஒரு முறை போய் படத்தை பாரேன், அவன் தான் மறுபடியும் மறுபடியும் வரான்ல என்று கூறியதும் அப்படத்தை பார்க்கிறார். படத்தை பார்த்து அசந்து போன இளையராஜா இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்றும் நானே வந்த விலைக்கு வாங்குகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.
பாதி படத்தை இளையராஜாவும் மறுபாதியை ராஜ் கிரணும் தயாரித்திருக்கிறார்களாம். படத்தினை இயக்கியது கஸ்தூரி ராஜா என்று பெயர் தான் போடப்பட்டது, ஆனால் இயக்கியதே ராஜ் கிரண் தானாம். அப்படிப்பட்ட படம் பெயர் தான் என் ராசாவின் மனசிலே.
You May Like This Video