ரூ. 20 ஆயிரம் கோடி சொத்து!! RCB அணியை வாங்கிய பிர்லாவின் மகள் அனன்யாவின் சொத்து மதிப்பு இவ்வளவா..
RCB அணி
ஐபிஎல் வரலாற்றின் மிகப்பெரிய விலையாக ராயல் சேலஞ்சர்ஸ் பென்களூரு அணி 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கு(ரூ.16,706 கோடி) விற்பனை செய்யப்பட்டாது. ஆர்சிபி-யை வாங்க ரஞ்சன் பாய் தலைமையிலான குழு மற்றும் EQT-பிரேம்ஜி இன்வெஸ்ட் கூட்டணி உட்படப் பலரும் கடும் ஆர்வம் காட்டியிருந்தனர்.

இறுதியில், குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்ய பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், டேவிட் ப்ளிட்ஸரின் போல்ட் வென்ச்சர்ஸ், பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பில் ஆர்சிபி அணியை வாங்கியுள்ளனர். இந்த விற்பனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 1.63 பில்லியன் அமெரிக்க டாலர் விற்பனை சாதனையை முறியடித்திருக்கிறது.
புதிய நிர்வாகத்தின் கீழ், ஆர்யமான் விக்ரம் பிர்லா தலைவராகவும், சத்யன் கஜ்வானி துணைத் தலைவராகவும் பொறுப்பேற்பார்கள். உரிமையாளர் குழுவில் போல்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டேவிட் ப்ளிட்ஸ் மற்றும் BXPE-ன் தலைமை நிர்வாக அதிகாரி விரால் படேல் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

பிர்லாவின் மகள் அனன்யா
இந்நிலையில், ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் சொத்து மதிப்பு சுமார் 21.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாம். உலகளவில் பில்லியனர்கள் வரிசையில் 119வது இடத்திலும் இந்தியளவில் 10வது இடத்திலும் இருக்கிறார்.

ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லா பற்றிய தகவல்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
31 வயதான அனன்யா பிர்லா, பாடகராகவும், பாடலாசிரியராகவும் திகழ்ந்து வருகிறார். தொழிலதிபராகவும் திகழ்ந்து வரும் அனன்யா பிர்லாவின் சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி முதல் 1770 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
தன்னுடைய தந்தை ஆர்சிபி அணியை வாங்கியதன் மூலம், அதை அறிவித்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
