செருப்பு தூக்கி போட்டதை மறைக்க இதெல்லாம் செய்கிறாரா விஜய்
Vijay
By Tony
விஜய் இன்று இந்திய சினிமாவிலேயே டாப் 5 நடிகர்களில் ஒருவராக வந்துவிட்டார். அவர் நடிப்பில் வரும் படங்களுக்கு இந்தியளவில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இரண்டு நாள் முன்பு விஜயகாந்த் இறந்தது ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியாக்கியது.
இதற்கு விஜய் ஷுட்டிங்கையே கேன்சல் செய்து அங்கிருந்து ஓடி வந்து கதறி அழுதார், அதை தொடர்ந்து திருநெல்வேலி-யில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, நேற்று கோட் பர்ஸ்ட் லுக் என விஜய் மற்றும் அவருடைய ரசிகர்கள் பிஸியாகவே இருக்கும்படி இருந்தது.
ஆனால் ஒரு சில விஷமிகள் இதை கூட விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் செருப்பு வந்ததை விஜய் மறைக்க தான் இப்படியெல்லாம் செய்கிறார் என்று கேவலமாக பேசி வருகின்றனர்.