'ரஞ்சிதமே’ ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஜானி மாஸ்டர்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், ராம் சரண், ரவி தேஜா என பலருக்கு படங்களில் நடனம் அமைத்து பிரபலமானவர் ஜானி மாஸ்டர்.
தமிழில் விஜய், தனுஷ் உள்ளிட்டோருக்கு இவர் நடன இயக்குனராக இருந்துள்ளார். அடுத்தடுத்து ஹிட் பாடல்களில் நடனம் அமைத்து வளர்ந்து வந்த ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் எழுந்தது.
அதாவது, 21 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை தெரிவித்துள்ளார். அவருடன் பணியாற்றிய போது பலமுறை படப்பிடிப்பு தளங்களுக்கு தன்னை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியுள்ளார்.
புகார் எழுந்ததை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை பெங்களூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய விருது ரத்து
இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் இடப்பெற்ற 'மேகம் கருக்காதா' பாடலுக்காக தேசிய விருது இவருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை காரணம் காட்டி தேசிய விருது பெற டெல்லிக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி நிபந்தனை ஜாமீன் கோரினார்.
அதன்படி, அக்டோபர் 6 - ம் தேதி முதல் அக்டோபர்
10 - ம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் இந்த விருது விழா நடக்கவிருந்த நிலையில், தேசிய விருதுகள் வழங்கும் ஆணையம் ஜானி மாஸ்டருக்கு வழங்க இருந்த தேசிய விருதை நிறுத்தி வைக்க போவதாக அறிவித்துள்ளது.