ஆர்த்தியின் சந்தேக புத்தி.. ஜெயம் ரவி மனைவி வீட்டுக்கு செல்லாமல்.. பகிர் கிளப்பும் பிரபலம்!!
சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எந்த நாளில் எந்த பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பார்கள் என்பது கூட தெரியவில்லை. அதே அளவுக்கு விவாகரத்து தகவல்கள் பெருகியுள்ளன.
இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்துள்ளனர் ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினர். சில பத்திரிகைகளின் செய்தியின்படி, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் விவாகரத்து அறிவிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. சிலர், இந்த செய்திகள் உண்மையில்லை, வெறும் வதந்தி என மறுக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன், ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர் ககூறுகையில், "ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் சந்தேக புத்தி தான் ஜெயம் ரவியை இப்படி ஒரு முடிவு எடுக்க காரணமாகியது. ஒருவரை கட்டி பிடிக்கலாம், ஆனால் எலும்பு நொறுங்கும் அளவுக்கு கட்டி பிடித்தால் அவர் எப்படி தாங்குவார்?"
"அது மட்டும் அல்லாமல் சமீப நாட்களாக அவர் தனியாக வாழ்ந்து வருகிறார். மனைவி வீட்டுக்கும் செல்லாமல், பெற்றோர் வீட்டுக்கும் செல்லாமல், தனியாக வசித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜெயம் ரவி தனது மனைவியுடன் இனி சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக தங்களது விவாகரத்தை அறிவிக்கவில்லை," என்றார்.