செருப்பால் அடிப்பேன்!! நாஞ்சில் விஜயன் விஷயத்தில் ஆக்ரோஷமான விஜே வைஷ்ணவி..
நாஞ்சில் விஜயன் - விஜே வைஷ்ணவி
காமெடி நடிகர் நாஞ்சில் விஜயகுக்கும் திருநங்கை விஜே வைஷ்ணவிக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சனை நடந்து வருகிறது. என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, என் பணத்தை வாங்கிகொண்டு ஏமாற்றிவிட்டதாக நாஞ்சில் விஜயன் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்து வந்தார் வைஷ்ணவி.
இந்நிலையில் விஜே வைஷ்ணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் செருப்பு வைத்துக்கொண்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், இந்த செருப்பு யாருக்குன்னு தெரியுமா? நாஞ்சில் விஜயனுக்குத்தான், நாஞ்சில் விஜயனோட ஆதரவாளர்கள் என்னுடைய கமெண்ட் செக்ஷனில் வந்து ரொம்ப அசிங்கமாக கமெண்ட்ஸ் போடுகிறார்கள்.
நான் செத்துப் போனாலும் அவர்தான் ஜெயிலுக்கு போவாரு, நான் எந்த தப்பும் பண்ணல, எங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடக்கிறது, எனக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் மட்டும் தான் தெரியும். நாங்க பேசி முடிச்சிப்போம்.
அவனுக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கா, எனக்கு குடும்பம் இல்லையா? அவன் மட்டும்தான் நல்லா வாழணுமா, எப்போ பாத்தால் என்னைப்பத்தி அவதூறா பேசுற உங்களை போன்ற ஆட்களை இனிமேல் நான் செருப்பால்தான் அடிப்பேன் என்று காட்டமாக பேசியிருக்கிறார் விஜே வைஷ்ணவி.