ஆர்த்தியை விவாகரத்து செய்து என்ஜாய் பண்ணும் ஜெயம் ரவி!! அவரே என்ன சொல்லிருக்காரு பாருங்க..
ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து ஆர்த்தி தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி விளக்கம் கொடுக்க இருவர் தரப்பிலும் மாறி மாறி விளக்கம் அளிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன் ஆர்த்தி, இவ்வளவு நாட்கள் நான் அமைதியாக இருந்தது எனது குற்றவுணர்ச்சி என்றோ, பலவீனம் என்றோ யாரும் நினைக்க வேண்டாம்.
திருமணத்தின் புனிதத்தை ரொம்பவே மதிப்பவள் நான். யாருடைய நற்பெயரையும் கெடுக்கும் விவாதங்களில் ஈடுபடமாட்டேன்.
இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடில்லை, ரவியிடம் தனிப்பட்ட முறையில் பேசக் காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
என்ஜாய் செய்கிறேன்
இந்நிலையில், இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திட்டமிடப்படாத சந்தோஷத்தை என்ஜாய் செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதனை கவனித்த ரசிகர்கள் ஆர்த்தியை பிரிந்ததைத்தான் ரவி இப்படி மறைமுகமாக கூறுகிறாரா? என்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.