புகைப்படம் கேட்ட ரசிகர்!! விஜய் எடுத்த போட்டோவை பகிர்ந்த ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி...
தமிழ் சினிமாவில் 2003ல் வெளியான ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் ஜெயம் ரவி. நடித்த முதல் படமே ஹிட் கொடுத்ததை அடுத்து, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்றார்.
இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் படத்தில், அருள்மொழி வர்மாவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். ஜெயம் ரவி கடந்த 2009ல் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து இரு மகன்களை பெற்றார்.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அழகில் போட்டோஷூட் எடுத்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். யாரும் பார்க்காத ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படத்தை கேட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.
அதற்கு ஆர்த்தி, தன் கணவர் மடியில் உட்கார்ந்து ரொமான்ஸ் செய்தபடி நடிகர் விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த போட்டோவை வைரலாக்கி வருகிறார்கள்.
