சின்ன சின்ன விஷயத்துக்கு சண்டை போட்ட ஆர்த்தி!! சப்போர்ட் ஆக இருந்த ஆர்த்தியின் அம்மா சுஜாதா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, தற்போது பிரதர் என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளார் என்ற தகவல் சமீபகாலமாக இணையத்தில் பேசு பொருளாக மாறி அதிர்ச்சியளித்துள்ளது. இருவரின் கருத்து வேறுபாடுக்கும் பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் ஜெயம் ரவியின் மாமியார் சம்பந்தமான பிரச்சனை தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயம் ரவி சைரன் படத்தில் நடித்த போது ஆர்த்தியின் தாயாரும் சைரன் படத்தின் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் தன்னுடைய மருமகன் பற்றியும் மகள் ஆர்த்தி சண்டை போடும் விஷயத்தை பற்றியும் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் சைரன் படத்தின் 3 லைன் கதையை இயக்குனர் கூறிய பின் ஜெயம் ரவியிடம் கூற சொல்லி படத்தை கமிட் செய்தேன். வயதான ரோலில் நடிக்கும் போது தலை முடியை வெள்ளையாக்கினார்கள். ஆனால் நான் இயக்குனரிடம் கொஞ்சம் கருப்பாக்குங்கள் என்றேன். உடனே ஜெயம் ரவி என்னிடம், ஆண்ட்டி என்னை மாப்பிள்ளையாக பார்க்காதீங்க, ஆர்ட்டிஸ்ட்-ஆ பாருங்க என்று சொன்னார்.
மேலும் பேசிய சுஜாதா, ஆர்த்தியும் ஜெயம் ரவியும் காதலித்த விஷயம் எனக்கு தெரிந்ததும் அதிர்ச்சியாகினேன். ஆர்த்தி சினிமாவிற்கு சம்பந்தம் இல்லாதவர் எப்படி ஜெயம் ரவியை காதலித்தார் என்று தெரியவில்லை. ஏதோ விழாவில் சந்தித்து காதலித்தார்கள் என்று தெரியவந்தது.
திருமணத்திற்கு பின் இருவரும் சண்டை போட்டு, அம்மா வீட்டுக்கு வந்து இருக்கிறார்களா என்ற கேள்விக்கு, சண்டை இல்லாமல் இருக்காது, அது இல்லாமல் என்ன சுவாரஸ்யம். இருவருக்கும் சிலர் விவாவதங்கள் வரும், ஆனால் நான் ரவிக்கு தான் சப்போர்ட் செய்வேன்.
ஆர்த்தி என்னிடம் மாப்பிள்ளை என்று சப்போர்ட் பண்றியா? நான் தப்பு பண்ணிட்டன்னு சப்போர்ட் பண்றியான்னு கோபப்படுவாள். அப்படி கிடையாது, ரவி கொஞ்சம் அமைதி. என் மகள் சின்ன விஷயத்துக்கு கோபப்படுவாள் என்று ஆர்த்தி தாயார் சுஜாதா பகிர்ந்துள்ளார்.