நிகழ்ச்சியில் கோபப்பட்டு வெளியேறிய சிம்பு! இதுதான் காரணம் என உண்மையை உடைத்த நடிகர் REWIND
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் டி ஆர்பியை உயர்த்த பல பொய் நிகழ்வுகளை வேண்டுமென்றே நடத்துவார்கள். அப்படியாக பல நிகழ்ச்சிகளில் சண்டை போடுவது போன்ற காட்சிகளை பிராங் செய்து பிரமோவாகவும் நிகழ்ச்சிகளிலும் நடிக்க கூறுவார்கள். அந்தவகையில், பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஜோடி நம்பர் 1 பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சி மூலம் சினிமாவில் நட்சத்திரங்களாக கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜோடி நம்பர் 1 சீசன் 2வில் சிலம்பரசன், நடிகை சங்கீதா நடுவர்களாக பங்கேற்ற போது சீரியல் நடிகர் பிரித்திவிராஜ் போட்டியாளரக பங்கேற்றார். ஒரு எபிசோட்டின் போது சிம்புவுடன் சண்டையிட்ட பிரித்திவிராஜ் அரங்கத்தை விட்டு வெளியேறினார். இதனால் பரபரப்பாகியது. இதுகுறித்து சமீபத்தில் நடிகர் பிரித்திவிராஜ் கூறுகையில், நானும் சிம்புவும் நல்ல நண்பர்கள்.
அந்த காட்சி டி ஆர்பிக்காகத்தான் நடந்தது. படத்தில் கர்ப்பழிக்கும் காட்சிகள் எப்படி ரியலாக இல்லையோ அதுபோலத்தான் இதுவும் நடிப்புதான் என்று கூறியுள்ளார். இதிலிருந்து தெரிகிறது, பிரபல தொலைக்காட்சி அப்போதிலிருந்தே டி ஆர் பிக்காக செயல்படுகிறது என்று.