சூர்யா குடும்பத்தினர் முகத்தில் விழிக்க பிடிக்கவில்லையாம்.. ஜோதிகா குறித்து இப்படி சொல்லிவிட்டாரே இந்த பிரபலம்
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' என்ற படத்தில் இணைந்து நடித்தபோது காதல் ஏற்பட்டு பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது, சினிமா நட்சத்திர ஜோடிகளில் மிகவும் ரசிகர்களால் விரும்பப்படும் ஜோடி என்றால் அது சூர்யா ஜோதிகா தான்.
ஆனால், சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் ஜோதிகா அதனால் தான் மும்பையில் செட்டில் ஆகி விட்டார் என தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
இது போன்ற தகவலை மறுத்தும் சூர்யா மற்றும் ஜோதிகா பேட்டிகளில் பேசி கொண்டு தான் வருகின்றனர். இந்நிலையில், தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் சூர்யா மற்றும் ஜோதிகா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
பிரபலம் பேட்டி
அதில், "கங்குவா படம் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஜோதிகா பங்கேற்கவில்லை. சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கூட சிவக்குமார் மற்றும் குடும்பத்தினர் மட்டும் தான் கலந்து கொண்டனர்.
ஜோதிகா அந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. ஒருவேளை அங்கு வந்தால் சிவக்குமார் குடும்பத்தின் முகத்தில் விழிக்க வேண்டியதாக இருக்கும் அது பிடிக்காமல் தான் ஜோதிகா வரவில்லை" என்று கூறியுள்ளார்.