குடும்பம், குழந்தைகள் மறந்து விட்டு நீ போ!! ஜோதிகாவுக்கு சிவகுமார் போட்ட கண்டிஷன்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் ஜோதிகா. இவர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் 36 வயதிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜோதிகாவிடம், "உங்களுடைய நடிப்புக்கு சிவகுமார் தடையாக இருந்தார் என்றும், குடும்ப பிரச்சனை காரணமாக தான் மும்பை செட்டிலாகி விட்டார்கள் என்ற வதந்திகள் வந்தது இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?" என்று கேள்வி கேட்டனர்.
இதற்கு பதில் ஜோதிகா,"அந்த வீட்டில் தனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்ததே என் அப்பா சிவகுமார். ஷூட்டிங் செல்லும் போது குடும்பங்களை குழந்தைகளை மறந்து வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று என்னிடம் கூறினார்".
"கோவிட் நேரத்தில் என் பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். என்னால் அடிக்கடி அங்கு செல்லமுடியவில்லை. அதனால் நான் சூர்யாவிடம் சொன்னேன் அவரும் மும்பையில் குடியேற சம்மதித்தார். அதற்காக வீட்டில் எந்த ஒரு பிரச்சனையும் நடக்கவில்லை" என்று ஜோதிகா கூறியுள்ளார்.
You May Like This Video