மதிக்காமல் வேண்டாம் என்று கூறிய இயக்குனர்!! தூக்கிஎறிந்த நடிகை ஜோதிகாவால் வருத்தப்பட்ட விஜய்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜோதிகா. முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து சில ஆண்டுகள் குடும்பம் குழந்தைகள் என்று இருந்து சினிமாவைவிட்டு விலகி இருந்தார்.
தற்போது மீண்டும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்தும் வருகிறார். மலையாளம், இந்தி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி வரும் ஜோதிகா விஜய் படத்தினை ஒதுக்கியது பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
குஷி, திருமலை போன்ற வெற்றிப்படங்களுக்கு பின்பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யின் படத்தில் கமிட்டாகி விலகி இருக்கிறார் ஜோதிகா. 2017ல் அட்லீ இயக்கத்தில் மெர்சல் படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டரை கொடுத்தது.
அப்படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனனுக்கு முன் ஜோதிகாவை தான் கமிட் செய்து வைத்திருந்தார் இயக்குனர். கதையில் சில மாற்றங்களை அட்லீயிடம் ஜோதிகா கூறியிருக்கிறார்.
ஆனால் அட்லீ அதை மாற்ற முடியாது என்று ஸ்ட்ராங்காக கூறிவிட்டாராம். இதனால் ஜோதிகா இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று விஜய்யிடம் சொல்லாமலே அங்கிருந்து கிளம்பியதோடு படத்தில் இருந்தும் விலகிவிட்டார். இந்த சம்பவம் விஜய்க்கு மன கஷ்டத்தை கொடுத்திருக்கிறதாம்.
பல ஆண்டுகள் கழித்து ஜோதிகாவுடன் இணையவுள்ளோமே என்று விஜய் சந்தோஷத்தில் இருந்திருந்தாராம். ஆனால் ஜோதிகா விலகியது விஜய் வருத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.