வாய்ப்பு தரேன்னு நம்ப வைத்து ஏமாற்றினார்!! இயக்குனர் பாலச்சந்தரை பழிவாங்கிய நடிகர்..
தமிழ் சினிமாவில் சீரியல் நடிகராக இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் நடித்து நடிகராகியவர் நடிகை ஸ்ரீகாந்த். ஜன்னல் - மரபு கவிதைகள் என்ற சீரியல் நடிக்க ஆரம்பித்த ஸ்ரீகாந்த், 2 ஆண்டுகளுக்கு பின் ரோஜா கூட்டம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இப்படத்தினை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார். அதன்பின் அவர் நடித்த பல படங்கள் சரியான வெற்றியை கொடுக்கவில்லை. விஜய்யின் நண்பன் படத்தில் நடித்தப்பின் அவர் நடிப்பில் வெளியான படங்களும் நல்ல வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், இயக்குனர் கே பாலச்சந்தர் பற்றிய சில தகவலை பகிர்ந்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன், ஆனால் சீரியல் வாய்ப்பு தான் கிடைத்தது. அப்படி அவர் இயக்கத்தில் சீரியல் நடித்துக் கொண்டிருந்த போது வெளிநாட்டுக்கு நான் போறேன், எனக்கு ஃப்ரேம் அடித்து விடுங்கள் நான் கிளம்புகிறேன் என்று கூறினேன்.
அப்போது ஃப்ரேம் அடிங்கள் என்றால் விபத்தில் அவர் இறந்துவிட்டார் என்று சீரியலில் அந்த கேரக்டரை முடித்து விடுவார்கள் என்று கூறியதும் வற்புறுத்தினார். அதன்பின் சரி போ என்று கூறினார். என் வாழ்க்கையை கெடுக்ககூடாது என்று நினைத்து என்னை அனுப்பி வைத்தார். அதன்பின் சினிமா பண்ணதை பார்த்து என்மேல் கோபப்பட்டார்.
பின் என்னை கூப்பிட்டு, ஒரு படத்திற்கு இயக்க கேட்டார். ரன் படத்தையும் கே பாலச்சந்தர் இயக்கும் படத்தையும் கவிதாலையா வைத்து படம் பண்ண கேட்டார். ஆனால், கே பாலச்சந்தர் இயக்கும் படத்தில் நான் பண்ணவில்லை, பண்ண முடியாது என்று சொல்லிவிட்டேன்.
அதற்கு காரணம், என்னை வைத்து படம் பண்ணுங்க என்று கேட்டதற்கு கொடுக்கிறே, கொடுக்கிறேன்னு சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஏமாத்திட்டார். எனக்கு அது ஏமாற்றமாக இருந்தது. அதனால் தான் அவர் படத்தை தயாரிக்க வேண்டாம் என்று கூறினேன் என்று உண்மையை பகிர்ந்துள்ளார்.