ஷூட்டிங்கில் இயக்குநர் பாலா செய்த வேலை!! ஆதங்கத்தை கொட்டிய நடிகை..
காஜல் பசுபதி பரதேசி
கேரளா சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை பற்றி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டதில் இருந்து அதுபற்றி பரபரப்பாக பல விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை காஜல் பசுபதி கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், பரதேசி படத்தின் போது அந்த தேயிலை தோட்டத்தில் நடிகை வேதிகாவை அடிப்பது போல் ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியை ஷூட்டிங்கில் பாலா நடித்து காட்டும் போது வேதிகாவை அடிக்காமல் அங்கிருந்த ஒரு துணை நடிகையை அழைத்து கடினமாக அடித்து காட்டினார்.
இதைப்பார்த்து எனக்கு ரொம்பவும் கோபம் வந்தது. அவர்தான் தைரியமான ஆள் ஆச்சே, பெரிய இயக்குநர், ஹீரோயினை அடிக்க வேண்டியதுதானே. அவரால் ஹீரோயினை அடிக்க முடியாதா, அந்த துணை நடிகைக்கு நடந்தது எனக்கு நடண்டிருந்தால் நிச்சயமாக கேட்டு இருப்பேன்.
ஆனால் அப்போது அதைப்பார்த்துவிட்டு அமைதியாக இருந்தேன். அப்படி பல படங்கள் நான் கேள்வி கேட்பதால் வாய்ப்புகள் அப்படியே குறைந்துவிட்டது. இப்படி எல்லா இடத்திலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று காஜல் ஓப்பனாக பேசியிருக்கிறார்.
