கூவத்தூர் ரிசார்ட்டில் விடியவிடிய நடந்த சம்பவம்!! காதல் சந்தியா பீச் அவுஸில் நடந்த சம்பவம்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகும் அளவிற்கு திறமை இருந்து ஒருசில படங்களில் மட்டும் நடித்து திருமணம் செய்து செட்டிலாகியவர்களில் ஒருவர் நடிகை சந்தியா. 2004ல் வெளியான காதல் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான சந்தியா, வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி, வெள்ளித்திரை, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ருத்ரவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
2015ல் வெங்கட் சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகிவிட்டார். ஷீமா என்ற பெண் குழந்தையை பெற்று குடும்பத்தை பார்த்து வரும் சந்தியா குறித்து ஒரு தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. சந்தியாவின் கணவர் பேல் பீச் என்ற பெயரில் சொந்தமான பீச் அவுஸ் பண்ணைவீடு நடத்தி வருகிறார்.
அங்குள்ள வில்லாக்களில் காதலியுடன் வார விடுமுறையை கழிக்க பலர் அங்கு வருவார்கள். அந்த அறையை சுத்தம் செய்யும் பொறுப்பு சுபாஷ் என்ற நபரிடம் வழங்கப்பட்டுள்ளது.
காதலர்கள் உள்ளே இருக்கும் போது அறையை வெளியில் இருக்கும் கதவில் இருக்கும் தாழ்பாள் கொண்டு திறக்கூடிய வசதியோடு இருந்திருப்பது பலருக்கும் தெரியாது. இதை சரியான சந்தர்ப்பமாக கருதி சுபாஷ், உள்ளே நுழைந்து காதலியிடம் சில்மிஷம் செய்திருக்கிறார். இது காதலன் தானா என்ற சந்தேகத்தில் அந்த பெண் லைட் ஆன் செய்திருக்கிறார்.
காதலன் படுத்திருப்பதை பார்த்து ஷாக்காகி கட்டிலுக்கு கீழ் பார்த்து அந்த நபரை கண்டதும் கத்தியிருக்கிறார் அந்த பெண். உடனே காதலர் எழுந்து அந்த நபரை விடியவிடிய அடித்து உதைத்து கூவத்தூர் போலிஸிடம் புகாரளித்துள்ளனர். அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த மொபைல் போனை பரிசோதித்துள்ளனர்.
அதில் பீச் அவுஸுக்கு வரும் பெண்கள் ஆடை மாற்றும் வீடியோ, குள்ளிக்கும் வீடியோ புகைப்படங்கள் இருந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளதை அடுத்து இந்த தகவல் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.