கமலுடன் காதல் உண்மையா பொய்யா! இதுதானாம்? பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை சிம்ரன்..
தமிழ் சினிமாவில் 90ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கியவர் நடிகை சிம்ரன். தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அறிமுகமாகி பின் தமிழில் வி ஐ பி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சிம்ரன்.
இதையடுத்து முன்னணி நடிகர்கள் கமல், அஜித், விஜய், பிரசாந்த் உள்ளிட்டவர்களுடன் நடித்து பிரபலமானார். சினிமாவில் நடித்து பல விருதுகளால் ரசித்து வந்த சிம்ரன் பல ஆண்டுகள் கழித்து பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது பல படங்களில் நடித்து வரும் சிம்ரன் ஆரம்பகாலக்கட்டத்திற்கு பின் கமலுடன் இருந்து உறவு பற்றி விரிவாக பதிலளித்துள்ளார்.
நடிகைகள் பலர் கமலுடன் பேசப்பட்ட அதேசமயத்தில், இடுப்பழகி சிம்ரனும் அந்த பிரச்சனையில் சிக்கி தவித்த சம்பவம் தான் தற்போதைய விவாதம். அந்த வகையில் தொடர்ந்து கமலஹாசனுடன் சில படங்களில் ஜோடியாக நடித்தவர் இடுப்பழகி சிம்ரன். உடனே பத்திரிகை வட்டாரங்களில் கமலுக்கும் சிம்ரனுக்கும் இடையில் கிசு கிசு என கிளப்பி விட்டனர்.
முதலில் வதந்தி என நினைத்து பத்திரிக்கையாளர் ஒருவர் ஒரு பேட்டியில் சிம்ரனிடம் கமலஹாசனை காதலித்தது என்னாச்சு? என கேட்டுள்ளார். இங்குதான் அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை உணர்த்தியுள்ளார் சிம்ரன். இருவருக்குள்ளும் எதுவும் இல்லை என்று சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லை.
ஆனால் என்னுடைய சொந்தப் பிரச்சனை பற்றியும், குடும்பப் பிரச்சினை பற்றியும் உங்களிடம் சொல்ல வேண்டிய விவரம் தேவையில்லாத ஒன்று என்றும், இருவரும் இதனால் சந்தித்து பேசமால் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், சிம்ரன் கமலுடன் மட்டுமல்லாமல் அதற்கு முன்னரே நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் என்பவர் மீது காதல் இருந்தது அப்போதே வதந்திகளாக பரவியது குறிப்பிடத்தக்கது.