சூர்யா - ஜோதிகா காதலால் மிரட்டி வைக்கப்பட்ட கார்த்தி!! அட்வைஸ் கொடுத்த மறைந்த நடிகை ஜெயலலிதா..
தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகர் கார்த்தி. அப்பா சிவக்குமார் மற்றும் அண்ணன் சூர்யாவின் உதவி இல்லாமல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானார்.
சமீபத்தில் அவரின் 25வது படமான ஜப்பான் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றதோடு வசூலில் நஷ்டத்தை தழுவியது. இந்நிலையில் அமீர் - ஞானவேல் ராஜா சம்பந்தமான பருத்தி வீரன் படத்தின் பண விசயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தான் தற்போது டாப் டாப்பிக்காக இருக்கிறது.
அமீருக்கு சாதகமாக பல நட்சத்திரங்கள் சப்போர்ட் செய்து வரும் நிலையில், அனைத்துக்கும் உறுதுணையாக இருந்த சிவக்குமார், சூர்யா மற்றும் அப்படத்தின் நாயகன் கார்த்தி அமைதி காத்து வருகிறார்கள்.
இதுஒரு பக்கம் இருக்க சிவக்குமார் குடும்பம் குறித்த சில விசயங்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி சூர்யா, கார்த்தி திருமணம் குறித்த தகவலும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்தவகையில், கார்த்தி காதலிக்காமல் அப்பா அம்மா பார்த்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டார். அதற்கு காரணம் சூர்யா - ஜோதிகாவின் காதல் விசயம் தான்.
சூர்யா - ஜோதிகா காதலித்து திருமணம் செய்ததை அடுத்து வெளிநாட்டில் படித்து முடித்து வந்த கார்த்தியிடன் காதலிக்க கூடாது என்று கண்டீசன் போட்டு வளர்த்து வந்துள்ளனர். அதனால் தான் கார்த்தி காதல் திருமணம் செய்யவில்லையாம். சூர்யா தான் அதை செய்யல நீயாவது இதை செய் என்று மறைந்த நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அட்வைஸ் செய்திருந்தாராம்.
இதுகுறித்து சிவக்குமார் பேட்டியொன்றில், சூர்யா ஜோதிகாவை காதலித்து இருந்தார்கள். நானும் அதற்கு ஒப்புக்கொண்டு திருமணத்தை முடித்து வைக்க ஆரம்பித்து, திருமண பத்திரிக்கையை கொடுக்க ஜெயலலிதாவை பார்க்க நான் கார்த்தி, என் மனைவி சென்றோம்.
அப்போது சூர்யா காதல் திருமணம் செய்கிறார், கார்த்தி நீயாவது அப்பா அம்மா பேச்சை கேட்டு அவர்களுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்துகொள் என்று அறிவுரை கூறினாராம்.
அதனால் தான் பெற்றோர்கள் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் நடிகை தமன்னாவுடன் காதலில் இருந்ததாகவும் இடையில் சிவக்குமார் புகுந்து மிரட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.